( ஒரு
விகற்ப
இன்னிசை
வெண்பா )
பற்றும்
பழவினையால்
பந்தப்
படும்வேளை
சற்றும்
சிவநாமம்
சாற்றுவை
நெஞ்சமே!
சுற்றும்
கயலுயரத்
துள்ளுமெழில்
பொன்னியலை
தெற்றும்
சிராப்பள்ளி
சேர்....1
குருவாய்
அமர்வோனின்
கோலம்
நினைந்தே
உருவாய்
ஒளியாய்
உணர்வாய்
மனமே
தருவான்
மலர்பதம்
தாயாய்
அருள்வான்
திருவார்
சிராப்பள்ளி
சேர்....2
தொல்வினை
சூழ்ந்தே
துயர்தரும்
போதினில்
வெல்வழி
யொன்றினை
மேவிடு
நெஞ்சமே
மெல்லிய
லாளொடு
வெள்ளை
எருதமர்
செல்வன்
சிராப்பள்ளி
சேர்....3
அவமாய்
அலைந்தே
அலமரும்
வாழ்வில்
நவமாம்
வழியினை
நாடிடில்
நெஞ்சே
தவமே
உருவெனச்
சார்ந்தார்க்(கு) அருளும்
சிவனார்
சிராப்பள்ளி
சேர்....4
தாவல்
தருவினையைத்
தாண்டி
உயர்வுறச்
சேவமர்
செல்வனருள்
தேடுமென்
நெஞ்சமே
நா
வல்
அடியர்
நயமுறப்
போற்றிடும்
தேவன்
சிராப்பள்ளி
சேர்.....5
தாவல் = வருத்தம்
சே + அமர் = சேவமர்
( உடம்படு
மெய் 'வ்' வந்து
சேவமர்
என்றாகியது )
அலையாய்
அலைந்தே
அமைதியை
நாடின்
நிலையாய்
மலர்தாள்
நினையென்
மனமே
கலையாய்
நடிக்கும்
கழலன்
இமயச்
சிலையான்
சிராப்பள்ளி
சேர்....6
சிலை=மலை.
நலம்பெற
வைத்து
நலி
வினைத்
தீர்த்தே
வலம்பல
நல்கிடும்
வாஞ்சைஎண்
நெஞ்சே!
தலம்பல
ஆடிடும்
தாண்டவன்
கைலைச்
சிலம்பன்
ச்ராப்பள்ளி
சேர்....7
ஆர்த்தெழும்
தீவினை
அண்டாதென்
நெஞ்சமே
வார்த்தையில்
சொல்லொணா
வாத்ஸல்யம்
பொங்கிடப்
பார்த்தருளும்
அன்னையாய்ப்
பாவையின்
துன்பினைத்
தீர்த்தான்
சிராப்பள்ளி
சேர்....8
பகழியின்
கூர்தோய்ப்
பறவையாய்
நோவ
நிகழும்
வினைத்துயர்
நீங்கிட
நெஞ்சே
தகழி
யொளியினில்
தண்மலர்
தூவத்
திகழ்ந்தான்
சிராப்பள்ளி
சேர்....9
பகழி=அம்பு.
கட்டும்
வினைகள்
கயிறாய்ப்
பிணிப்பதை
விட்டு
விலகிட
வேண்டிடின்
நெஞ்சமே
இட்டன், அடியருக்(கு) இன்னருள்
செய்திடும்
சிட்டன்
சிராப்பள்ளி
சேர்....10