விரிவான்
கங்கையன்
வெண்ணீ
றணிசிவன்
பொரியார்
வண்டுசூழ்
பூம்பொழில்
தளியான்
தரியான்
அன்பிலார்
தம்முளம்
அவர்க்கே
அரியான்
ஆலவாய்
மேவிய
அண்ணலே....1
முன்பின்
இல்லா
ஆதியாம்
மூலமாம்
அன்பில்
ஆளும்
அருள்நிறை
வள்ளலாம்
துன்பில்
தோன்றாத்
துணையாய்த்
தோன்றிடும்
என்பொன்
ஆலவாய்
மேவிய
ஈசனே.....2
வீற்ற
இன்னருள்
கோலமும்
வெவ்வினை
மாற்றும்
ஆறுதல்
தந்திடும்
மாயமென்?
போற்றும்
அன்பரின்
பற்றெனும்
பூரணன்
ஏற்றில்
ஏறுமெம்
ஆலவாய்
ஈசனே...3
புறவும்
ஆழியும்
நின்னருள்
போற்றிடும்
கறவைக்
கன்றென
உன்
தாள்
கருதியே
நறவு
சேர்மலர்
தூவினேன்
நைவினை
அறவந்
தேத்துமெம்
ஆலவாய்
அண்ணலே....4
புறவு=காடு,நறவு=தேன்,வாசனை
கறவை=பசு.....
கல்லால்
தாக்கினும்
கனிந்ததைத்
தாங்குவான்
ஒல்லாச்
சாட்டையின்
ஊறினை
ஒப்புவான்
சொல்லால்
கூடிடாத்
தூயமெய்
அன்பினால்
எல்லாம்
நல்கும்நம்
ஆலவாய்
அண்ணலே....5
கல்லால்=கல்லினால்.(சாக்கிய
நாயனார்)
ஒல்லா=பொறுக்கமுடியாத.
விதித்த
வாழ்வும்
வெருதா
கிடாதுளம்
பதித்த
நாமம்
பரவினால்
உய்யலாம்
கதித்து
ஆடுவான்
கழலிணைக்(கு) அன்பராய்த்
துதித்த
வர்துயர்
தீர்
ஆல
வாயரே....6.
கதித்து=விரைந்து
மாலை
வண்ணனாய்
மன்றதில்
ஆடிடும்
நீல
கண்டனாய்
நெஞ்சுறைத்
தெய்வமாய்ச்
சூலை
நோயுறு
தூயடி
யார்க்கருள்
ஆல
வாயுறை
அங்கண்
அடிகளே....7.
கல்லேன்
பொன்னார்
கழல்தொழு
துய்வழி
வல்லான்
இன்னருள்
வள்ளலென்(று) ஏத்திலேன்
பொல்லாத்
தீவினைப்
பொடியெனச்
செய்குவன்
நல்லார்
போற்றும்நம்
ஆலவாய்
நாதனே....8.
ஆர்=அழகு
என்னும்
பொருளில்
கால
காலனாய்க்
கண்ணுதல்
அண்ணலாய்க்
கோல
மாகவேக்
கொண்டிடும்
ஆடலை
ஞால
முய்ய
நடித்தநம்
ஐயனாம்
ஆல
வாயரற்
கன்புசெய்
நெஞ்சமே....9.
சேவி
லூர்பவன்
சிந்தையில்
நிற்பவன்
கூவி
யன்பர்
குரல்கொடுத்
தாலுமே
தாவி
வந்தருள்
தந்திடும்
மெய்யனாய்
ஆவி
காப்பவன்
ஆலவாய்
அண்ணலே.....10.
(கலிவிருத்தம்)