('விளம் விளம் காய்'- என்ற அமைப்பு.
சம்பந்தர் தேவாரம் -1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")
வார்சடைமீதொளிர்மதியுடையான்
சீர்மிகுபேர்தொழும்அன்பருளம்
சார்பவன்உறைவிடம்தண்பொழில்சூழ்
ஏர்மலிஇலம்பையங்கோட்டூரே....1
விழிநுதல்உடையவன்வெவ்வினைசெய்
பழியினில்தொடரிடர்ப்பார்த்தருளைப்
பொழிகுவன்உறைவிடம்பூஅளியார்
எழில்பொழில்இலம்பையங்கோட்டூரே....2
கரும்பினைகரம்கொளும்காமாட்சி
விரும்பிடும்ஈசனும்வேண்டுவதைத்
தரும்பதிஉறைவிடம்தண்ணளியார்
இரும்பொழில்இலம்பையங்கோட்டூரே....3
ஊர்விடைஅமர்பவன்உண்பலிதேர்
ஓர்முடைத்தலையெனும்ஓடுடையான்
நீர்மடைஎனவருள்நெஞ்சனிடம்
ஏருடைஇலம்பையங்கோட்டூரே....4
தருஞ்சுகமவன்கழல்சாற்றுமன்பர்
பெருஞ்சுமையெனும்வினைதீர்த்தருளும்
அருஞ்சுவைப்பேருடைஐயனிடம்
இருஞ்சுனைஇலம்பையங்கோட்டூரே....5
பாடிடும்அன்பரின்பாவலங்கல்
சூடிடும்அருள்நிதிதோன்றுமிடம்
தேடிடும்பொழில்மலர்த்தேனளிகள்
கூடிடும்இலம்பையங்கோட்டூரே....6
நளிர்மதிசடையனைநாடிடுவோர்க்(கு)
ஒளிர்கழல்அருள்பவன்உறையுமிடம்
துளிர்விடுமுகைமலர்ச்சுரும்பினமார்
குளிர்பொழில்இலம்பையங்கோட்டூரே....7
நிசமவன்தீங்கினைநீக்கியன்பில்
வசமுறஅருள்கிறவள்ளலிடம்
அசைவுறுவணம்குயில்ஆர்த்திடும்பண்
இசைமலிஇலம்பையங்கோட்டூரே....8
பன்னகம்அணிபவன்பைந்தமிழில்
சொன்மலர்மாலைகள்சூடுமையன்
பொன்னவன்உறைவிடம்பூஞ்சுரும்பார்த்(து)
இன்புறும்இலம்பையங்கோட்டூரே....9
திசையறிகிலாவெளித்திரிகோள்கள்
விசையுறுகதிசெலவிதித்தவன்நல்
இசையதுவானவன்இருக்குமிடம்
இசையுடைஇலம்பையங்கோட்டூரே....10