February 20, 2010

ஆருர் அடை நெஞ்சே!--3

எமனைச் சினத்துடன் எற்றி யுதைத்தோன்
கமல மலர்ப்பதம் காத்திடும் நெஞ்சே!
சுமையென்பார் தீவினை சுட்டிடும் நேசன்
அமலன்மே(வு) ஆரூர் அடை.

கொய்யும் மலர்கொடு கும்பிடும் நெஞ்சமே!
பைய உறுவினைப் பையுளும் நீக்குவன்;
துய்யன்சீர் வன்றொண்டர் சுந்தரர் பாடிடும்
ஐயன்மே(வு) ஆரூர் அடை.


பையுள்=துன்பம்

2 comments:

  1. ஆகா, அருமை!
    ஆரூரான் ஆரமர்ந்து ஆசிநல்கட்டும்!

    ReplyDelete
  2. அன்புள்ள ஜீவா!
    உங்கள் பாராட்டுக்கும்,நலம்விழைவுக்கும்
    மிகவும் நன்றி!
    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete