'மா
புளிமாங்காய்
மா
புளிமாங்காய்'
என்ற
வாய்பாடு.
பண்ணார்
நடமாடும்
பதமே
தருவாயே
கண்ணால்
முடி,தாளைக்
காணா
அயன்மாலும்
விண்ணாய்
வளர்தீயாய்
மிளிரும்
உனைநாடும்
அண்ணா
மலையானே
அடியேற்
கருள்வாயே....1
புண்ணாம்
படிநோவப்
புரியும்
வினையோடக்
கண்ணார்
ஒளிமேவும்
கருணை
பொழிவாயே
மண்ணாய்ப்
புனல்வானாய்
வளியாய்
அழலானோய்
அண்ணா
மலையானே
அடியேற்
கருள்வாயே....2
கண்ணால்
உகுநீருக்
கருள்வாய்
மதலைக்கே
உண்ணா
அமுதுண்டே
உமையா
ளுடைமைந்தாய்
பண்ணார்
பதிகத்தால்
பரவித்
துதிசெய்தார்
அண்ணா
மலையானே
அடியேற்
கருள்வாயே....3
கண்ணீர்
விழிமல்கக்
கரையும்
உணர்வாகி
எண்ணேன்
உனதன்பை
இரங்காய்
இறையோனே
விண்ணாய்
உயர்கோவில்
மேவும்
அருணேசா
அண்ணா
மலையானே
அடியேற்
கருள்வாயே....4
புண்ணார்
விழிசெந்நீர்ப்
புனலாய்
வழிந்தோடக்
கண்ணாய்த்
தனதப்பும்
கருணை
சொலப்போமோ?
திண்ணார்த்
தடந்தோளன்
திண்ணன்
துதிசெய்யும்
அண்ணா
மலையானே
அடியேற்
கருள்வாயே....5
வண்டார்
மலர்மாலை
வடிவாய்
இசைந்தாடக்
கண்டோர்
உனைநாடும்
கதியாய்
வருவாயே
பண்டாய்
நவமானாய்
பதியே
பரமேசா
அண்ணா
மலையானே
அடியேற்
கருள்வாயே....6
எண்ணாய்
எழுத்தாகி
இயம்பும்
பொருளாகிப்
பண்ணார்
இசையாகிப்
பரவும்
துதியானாய்!
கண்ணோர்க்
களியாகக்
காணும்
பெருஞ்சோதி
அண்னா
மலையானே
அடியேற்
கருள்வாயே.... 7
எண்ணேன்
இமைப்போதுன்
இணைத்தாள்
சிரமேற்கப்
பண்ணேன்
உனைநாளும்
பரவும்
துதிபூசைத்
தண்ணார்
தடம்சோலைத்
தருசூழ்
வனமோங்கும்
அண்ணா
மலையானே
அடியேற்
கருள்வாயே....8
கண்ணா
யிரங்கொண்ட
காளி
யவள்கேள்வா
விண்ணா
றினையேற்கும்
விரிசெஞ்
சடையோனே
வெண்ணீ
றணிவோனே
விந்தை
அழலோனே
அண்ணா
மலையோனே
அடியேற்
கருள்வாயே....9
விண்ணோர்
அமுதேஎம்
வினையாம்
பவம்தீர்ப்பாய்
பெண்ணோர்
புறம்வைத்தாய்
பிறைவார்
சடையோனே
மண்ணோர்
தொழும்ஞான
மறையோன்
ரமணர்சேர்
அண்ணா
மலையானே
அடியேற்
கருள்வாயே....10
No comments:
Post a Comment