January 02, 2012

திருக்காளத்தி

'தான தானன தான தானன
தான தானன தானன
தான தானன தான தானன
தான தானன தானன'
- என்ற சந்தம்.


ஈற்றுச் சீரைத் தவிர மற்ற சீர்கள் எல்லாம் குறிலில் முடியும்.


பிச்ச னேயெனும் அன்புக் காட்படும்
அச்சன் மேவிய காளத்தி
மெச்சி யோதிடும் அன்ப ருக்கவன்
வைச்ச மாநிதி ஆவனே....1

சுட்ட நீறணி சோமன் கீளுடைக்
கட்டு வானுறை காளத்தி
நிட்டை யாய்த்தொழும் நெஞ்சி னார்த்துயர்
விட்டு மேனிலை மேவுமே....2

 

விண்ணு லாவெயில் மூன்றும் தீப்படு
கண்ணி னானுறை காளத்தி
நண்ணி நற்றமிழ் நாளும் போற்றிடத்
திண்ண மாய்வினை தீருமே....3

விண்+உலாவு+எயில்=விண்ணுலாவெயில்

விண்ணி லாதிகழ் வேணி சேர்மலர்க்
கண்ணி யானுறை காளத்தி
அண்ணு வாருறு அன்பில் போற்றிட
மண்ணி னார்வினை மாயுமே....4

 

ஐய னேயெனின் அஞ்சல் தந்திடும்
கையி னானுறை காளத்தி
பைய வேஇசை பாடிப் போற்றுதல்
செய்ய வல்வினை தீருமே....5

நாட்ட மோடருள் நல்கி உய்வழி
காட்டு வானுறை காளத்தி
வேட்டு மின்னிசை மேவ ஏத்திட
வாட்டு மூழ்வினை மாயுமே....6

 

மங்கை யாளுமை மன்னன் செஞ்சடை
கங்கை யானுறை காளத்தி
இங்கி தம்பெற எண்ணி ஏத்திட
எங்கு மேநிறை இன்பமே....7

நைய வேபலி நாடும் கப்பரை
கையி .னானுறை காளத்தி
மெய்யில் நீறினை மேவி ஏத்திட
மையல் செய்வினை மாயுமே....8

 

வேத மெய்ப்பொருள் வேலன் ஓதிடும்
காதி னானுறை காளத்தி
ஆத ரம்பெறும் அன்பில் ஏத்திட
ஏத மென்பதும் இல்லையே....9

ஆடு வான்திரு ஆடல் தீயெரி
காடு ளானுறை காளத்தி
நாடி நற்றுணை நாளும் வேண்டிட
ஓடி வெவ்வினை ஓயுமே....10

No comments:

Post a Comment