
(வஞ்சி விருத்தம் - "புளிமா புளிமா புளிமாங்காய்" என்ற வாய்பாடு)
குறைசேர் மனதுள் குமையாமல்
நிறைவே அடைய நினைநெஞ்சே!
பிறையேர் சடையன் பெருநிதியன்
கறைசேர் மிடறன் கடவூரே.....1
குமைதல்=வருந்துதல்
ஏர்=மிக்க அழகு.
இருளா குவினை யதுதீர
வெருளா தவழி அடைநெஞ்சே!
மருமா மலர்சூழ் பொழில்மேவும்
கருமா மிடறன் கடவூரே.....2
>>இருளா குவினை யதுதீர
ReplyDeleteவெருளா தவழி அடைநெஞ்சே!
அருமை!
கடவூர் அபிராமி என் தாயின் அபிமான தெய்வம்.
அன்புள்ள அப்பாதுரை!
ReplyDeleteஉங்கள் வரவுக்கும்,கருத்துக்கும்
மகிழ்வான நன்றி!
அன்புடன்,
தங்கமணி.