June 13, 2010

கடவூர் அடை நெஞ்சே!---1


(வஞ்சி விருத்தம் - "புளிமா புளிமா புளிமாங்காய்" என்ற வாய்பாடு)

குறைசேர் மனதுள் குமையாமல்
நிறைவே அடைய நினைநெஞ்சே!
பிறையேர் சடையன் பெருநிதியன்
கறைசேர் மிடறன் கடவூரே.....1

குமைதல்=வருந்துதல்
ஏர்=மிக்க அழகு.


இருளா குவினை யதுதீர
வெருளா தவழி அடைநெஞ்சே!
மருமா மலர்சூழ் பொழில்மேவும்
கருமா மிடறன் கடவூரே.....2

2 comments:

  1. >>இருளா குவினை யதுதீர
    வெருளா தவழி அடைநெஞ்சே!

    அருமை!
    கடவூர் அபிராமி என் தாயின் அபிமான தெய்வம்.

    ReplyDelete
  2. அன்புள்ள அப்பாதுரை!
    உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும்
    மகிழ்வான நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete